50 வயசு ஆச்சா...? 'இல்லன்னா அப்படியே ஓடி போயிடுங்க...' இந்த 'மதுவில்' அப்படி என்ன ஸ்பெஷல்...? 'ஆஹா... வாங்க முடியலையே...' - கலக்கத்தில் 'இளம்' மதுப்பிரியர்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகில் பலவிதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் சாதாரண விலையில் தொடங்கி லட்சக்கணக்கான விலை வரைக்கும் விற்பனை செய்யும் மதுபானங்கள் உண்டு. அந்த வரிசையில் தற்போது அறிமுகம் ஆகியுள்ள மதுபானம் மதுப்பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சளி பிடிக்கும் நேரங்களில் ஆவி பிடிக்க சொல்வார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மக்கள் அனைவரும் அடிக்கடி ஆவி பிடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில், நாம் ஆவி பிடிக்கும் நீராவியை சுவாசித்தால் போதை ஏறும் மதுபானம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த மதுபானத்தின் விலை இந்திய பணமதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் ஆகும்.

அதுமட்டுமில்லாமல், இந்த மதுபானம் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறதாம். இளம் வயதினர் வந்துக் கேட்டால் மறுத்து விடுகின்றனர். இதை குடிக்கும் ஒரு சிலர் வீடியோவாக பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்