"இப்படி ஒரு காட்சியை..." "வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீர்கள்..." 'கிரஹணத்தின்' திகைக்க வைக்கும் 'மற்றொரு காட்சி...!' 'வைரல் புகைப்படம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமீபத்தில் நிகழ்ந்த சூரிய கிரஹணத்தின்போது, பூமியின் மீது விழுந்த நிலவின் நிழலை, விண்வெளியிலிருந்து வீரர் ஒருவர், படம் பிடித்து அனுப்பியுள்ளார். இந்த அற்புதக் காட்சி காண்போரை திகைக்க வைத்துள்ளது.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரிய கிரஹணம் ஏற்படுகிறது. கடந்த, 21ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரஹணத்தை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசேஷ கண்ணாடி அணிந்தும், தொலைநோக்கி வாயிலாகவும் கண்டு ரசித்தனர்.

பூமியிலிருந்து, சூரியனைப் பார்த்தபோது, நிலவால் மறைக்கப்பட்ட சூரியன், 'நெருப்பு வளையம்' போல காட்சி அளித்தது.

அதே நேரத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பூமியைப் பார்த்தபோது, நிலவின் நிழல், பூமி மீது விழுந்தது. அதை கிறிஸ் காசிடி என்ற, 'நாசா' விண்வெளி வீரர், விண்வெளியிலிருந்து படம் பிடித்து தனது, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பூமியில் இருந்து வெகு தொலைவில் நிலவு இருந்ததால், அதன் நிழல் பூமியின் சிறிய பகுதியில் மட்டும் விழுந்ததை, நாசா வீரரின் புகைப்படம், தெளிவாக காட்டுகிறது. இதுவரை இப்படி ஒரு கோணத்தில் நிலவின் நிழலை யாரும் கண்டதில்லை. இந்த அற்புதக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்