"எதே.. ? 31 ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துருக்கா".. சொல்லவே இல்ல.. ஆச்சரியத்தில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலுள்ள பல இடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சியாளார்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!

இதன் காரணமாக, மண்ணில் புதைந்து கிடக்கும் பல ஆயிர ஆண்டுகள் மர்மம் மற்றும் அரிய தகவல்கள் என ஏராளமான விஷயங்கள் வெளியே தெரிய வந்து பலரையும் வியப்பில் ஆழ்த்துவது வழக்கமான ஒன்றாகும்.

இதில், ஒரு காலத்தில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிகழ்வுகள், இப்படி கூட நடந்திருக்குமா என்று நம்மை அப்படியே உறைய வைக்கும்.

அப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்பான முடிவுகள் தான் பலரையும் சிலிர்க்க வைத்துள்ளது. இந்தோனேசிய நாட்டின் போர்னியோ என்னும் பகுதி அருகே அமைந்துள்ள குகை ஒன்றில் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இவர்களின் ஆய்வில் பல்வேறு குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டும் வந்தது.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் அந்த குகையின் ஒரு பகுதியை தோண்டிய போது, அதற்குள் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதே போல, இந்த மனித எலும்புக்கூடானது, மண்ணோடு மண் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மனிதன் சுமார் 31,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருடையது என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இதன் இடது கால் பாத எலும்புகள் காணாமல் போய் இருந்தது. முதலில் கால் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதிய நிலையில், அதன் பின்னர் தெரிய வந்த விஷயம், அவர்களை உச்சகட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால், அந்த மனிதனின் இடது கால் பாதம் அறுவை சிகிச்சை முறையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டிருப்பது என்பது தான் அது. முன்னதாக, 6,000 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடந்ததாக தான் நம்பப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது 31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விஷயம், ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இது பற்றி ஆராய்ச்சியாளர் தரப்பில் இருந்து வெளியான தகவல்களின் படி, அந்த மனிதன் குழந்தையாக இருந்த போதே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. முதலை போன்ற ஏதேனும் ஒரு விலங்கு கடித்ததை தொடர்ந்து, எக்ஸ் ரே, ஸ்கேன் என எதுவும் இல்லாமலேயே மிகவும் துல்லியமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருந்துகள் எதுவும் இல்லாமல், எப்படி அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள் என்பது மலைப்பில் ஆழ்த்தி உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | மொத்தமா 15 மனைவிகள்.. 107 குழந்தைங்க.. "இத்தனை கல்யாணம் பண்ணது ஏன்? அதிரவைத்த காரணம்..

SCIENTISTS, SKELETONS, RECOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்