அப்படி பண்ணாதீங்க...! 'சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்...' 'டென்ஷன் ஆன குதிரை டக்குன்னு...' - பெண்களிடம் வம்பு செய்தவருக்கு கிடைத்த பாடம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவில் குடிபோதையில் இருந்த இளைஞர் குதிரையை முத்தமிட முயன்றபோது குதிரை மூக்கை நறுக்கென்று கடித்து எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 25 வயதான  வாசிலி (Vasily) என்ற இளைஞர் குடிபோதையில் குதிரை சவாரி செய்த இரண்டு பெண்களிடம் வம்பு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குதிரையையும் தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்தக் குதிரைக்கு முத்தமிட முனைந்துள்ளார். குதிரையின் வாயின் முன் நிற்க வேண்டாம் என்று அந்தப் பெண் பலமுறை எச்சரித்தும் வாசிலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் முத்தமிட முயன்ற போது குதிரை இறுதியில் அந்த ஆணின் மூக்கை கடித்தே விட்டது.

மேலும் கடித்த அந்த மூக்கின் பகுதியை டாக்டர்கள் தையல் மூலம் ஒன்றாக இணைத்துள்ளனர். குதிரையின் கடி, ஆணின் குருத்தெலும்பை அடைந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும் என்பதாக டாக்டர்கள் கூறியிருக்கின்றனர். மூக்கை இழந்த நபர் தான் மது பாட்டில்களை வைத்திருந்ததை அவர் ஏற்றுக்கொண்டாலும், தான் குடிபோதையில் இல்லை என வாசலி கூறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய வாசலி, 'நான் நேற்று குடித்தேன், ஆனால் குதிரையை முத்தமிட நான் ஒருபோதும் முயன்றதில்லை. ஏனெனில் அது ஆபத்தானது என்று எனக்கும் தெரியும். நான் குதிரையின் மேல் அமர்ந்திருந்த பெண்ணை ஸ்ட்ரோக் செய்ய விரும்பினேன். மேலும் அந்த குதிரைக்கு நான் கேரட்டை தான் உணவளித்தேன், அதற்கு அந்த குதிரை என்னிடம் கோபமாக திரும்பியது' எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்