போரை வென்ற காதல்.. உக்ரைன் காதலியை கரம்பிடித்த ரஷ்ய வாலிபர்.. கல்யாணம் நடந்த இடம் தான் 'செம'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த தகவலே.

Advertising
>
Advertising

Also Read | "இது தான் அம்மா மாதிரி ஆகுறதா??.." இணையவாசிகள் இதயத்தை வென்ற சம்பவம்.. அசத்திக் காட்டிய தாய் - மகள் காம்போ

கடந்த ஐந்து மாதங்களாக, தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி, ரஷ்யா தொடர்ந்து சண்டை போட்டு வருகிறது.

உக்ரைன் நாடும், பதிலடி கொடுத்து சண்டை போட்டு வரும் நிலையில், உக்ரைனிலுள்ள மக்கள் வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து தங்கள் உயிரைக் காத்து வருகின்றனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து, உலக நாடுகளும் தொடர்ந்து தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் ஒன்று, பலரையும் சற்று நெகிழ வைத்துள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் Sergei Novikov. இவர் இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறார். இவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Elona என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் திருமணம் செயது கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். அதே வேளையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் திருமணம் செய்ய தேர்வு செய்த இடம் தான், தற்போது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. போர் காரணமாக, காதல் ஜோடி இருவரும், இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தரம்ஷாலாவில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, சமீபத்தில் இவர்கள் இருவரின் திருமணமும், தரம்ஷாலாவில் வைத்து, அதுவும் இந்திய முறைப்படி நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு ஜோடி, இந்திய முறையில் உடை அணிந்து கொண்டு திருமண சடங்கில் கலந்து கொண்டனர். முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே Sergei மற்றும் Elona ஆகிய இருவரும் தரம்ஷாலாவில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆஷ்ரம் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெறவே, அப்பகுதியில் உள்ளவர்கள் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் விடுமுறையை கழிக்க வந்த வெளிநாட்டவர்களும் Sergei மற்றும் Elona ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வை தராமல் இருக்க, உள்ளூர்வாசிகள் ஆடி பாடி, பல சடங்குகளை நடத்தவும் செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற வரும் நிலையில், மறுபக்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி, இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம், பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Also Read | பட்டமளிப்பு விழாவுக்காக மேடை ஏறிய வாலிபர்.. அரங்கில் கேட்ட திடீர் சத்தம்.. "என்ன ஒரு 'நெகிழ்ச்சி' மொமெண்ட்"

MARRIAGE, RUSSIA MAN, MARRIED, UKRAINE GIRLFRIEND, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்