திடீர்'னு 'மூச்சு' விட கஷ்டப்பட்ட 'நபர்'... 'ஹாஸ்பிடல்'ல செக் பண்ணப்போ தெரிய வந்த 'அதிர்ச்சி'!!!... "'50' வருஷமா அவரோட 'மூக்கு'ல தான் 'அது' இருந்துருக்கு..."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவரின் மூக்கிற்குள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த நாணயம் ஒன்றை தற்போது மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அந்த மனிதர் தனது ஆறு வயதில் நாணயம் ஒன்றை மூக்கின் வலது நாசியில் வைத்து உள்ளே புகுத்தியுள்ளார். அப்போது, மிகவும் கண்டிப்பான குணத்துடன் இருந்த தனது தாயிடம் இதுகுறித்து கூற பயந்துள்ள நபர், அந்த சம்பவத்தை அப்படியே சொல்லாமல் மறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல், காலப் போக்கில் அவரும் அதனை மறந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் தனது வலது நாசி மூலம் மூச்சு விட முடியாமல், இரவு தூங்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அருகிலுள்ள மருத்துவமனையை அவர் அணுகிய போது, அவரது மூக்குப் பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். கருப்பு நிறத்தில் எதோ தடைபட்டு இருப்பதை அறிந்து கொண்ட மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில், எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவரது மூக்கில் அடைந்திருந்த நாணயம் அகற்றப்பட்டது. அதன் பின்னர், மூச்சுவிட எந்த குறையும் இல்லாமல் அந்த நபர் பூரணமாக குணமடைந்துள்ளார். மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நாணயம் தற்போது ரஷ்யாவில் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்