'காதலனுடன்' இணைந்து 'பெண்' அதிகாரி செய்த 'காரியம்'... 'உச்சக்கட்ட' கடுப்பில் உயர் அதிகாரிகள்... 'சர்ச்சை'யை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் கடற்படை அதிகாரி ஒருவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் காதலனுடன் சேர்ந்து செய்த செயல் ஒன்று, உயர் அதிகரிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளாரி ஜென்கின்ஸ் என்ற பெண் அதிகாரி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்னும் பகுதி அருகேயுள்ள ரகசிய அணுஆயுத தளத்தில் அமைந்துள்ள நீர்மூழ்கி கப்பலுக்குள் வைத்து, தன்னுடன் பணிபுரிந்து வரும் காதலரான லியாம் என்பவருடன் இணைந்து ஆபாசமான வீடியோக்களை படமெடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், இந்த வீடியோக்களை 'Only Fans' எனப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இதன் மூலம் பணமும் சம்பாதித்து வந்துள்ளார்.

இவர்களுக்கென அந்த இணையதளத்தில் அதிகம் பயனாளர்களை உள்ளனர். காதலன் லியானுடன் இணைந்து இது போன்று ஆபாச வீடியோக்களை ரகசிய தளத்திற்குள் வைத்து அதிக முறை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள கிளாரி குறித்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர் அதிகாரிகள்.

அணு ஆயுத கப்பல் தளம் என்பது ஒரு நாட்டின் பல ரகசியங்களை காப்பதற்கான இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில், ஒரு கடற்படை அதிகாரி, எப்படி தனது காதலருடன் இணைந்து, போன் அல்லது கேமராவை உள்ளே கொண்டு சென்று ஆபாச படங்களை எடுத்தனர் என்பதில் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர். அதே போல, ஒருவர் முழுவதும் சோதனை செய்யப்பட்ட பின்னரே, கப்பலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அப்படி இருக்கும் போது, இவர்கள் எப்படி உள்ளே கேமரா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று படம் பிடித்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போது மற்ற அனைத்து சிக்கல்களையும் விட, உயரதிகாரிகளுக்கு எழுந்துள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், ஒரு நாட்டின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் ஒரு பகுதியில் வைத்து இவர்கள் படம்பிடித்த ஆபாச வீடியோக்களைக் கொண்டு, வெளிநாட்டு முகவர்கள் யாரேனும், அந்த ஜோடியை மிரட்டி, நாட்டின் ரகசிய தகவல்களை வாங்க முற்படுவார்களோ என்பது தான்.

ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் வைத்து இப்படி ஒரு தவறான செயலில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்