'என் கணவர் என்னை விட்டு பிரிந்தார்...' 'இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவு...' - உலக தலைவர்கள் இரங்கல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் அவர்களின் கணவர் இளவரசர் பிலிப் தன்னுடைய 99 வயதில் இன்று உலகத்தை விட்டு மறைத்துள்ளார்.

இங்கிலாந்தின் மகாராணியாக விளங்கும் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி செவ்வாய் கிழமை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லண்டனில் இருக்கும் தனியார் கிங் எவர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர், தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய போதும், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 9ம் திகதி காலை வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் இயற்கை ஏய்தியுள்ளார்.

மேலும் தன் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் காலமானதாக மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார். இளவரசர் பிலிப் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்