'என்னால முடியல, என்ன மன்னிச்சிடுங்க'... 'நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்'... 'மனுஷன் இப்படி மன்னிப்பு கேட்டுட்டாரே'... உருகிய மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாட்டு மக்களிடம் பிரதமர் ஒருவர் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிகழ்வு அந்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

க்ரீஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி வரை உள்ளதாகக் கூறப்படுகிறது. காட்டு தீ காரணமாக மக்கள் குடியிருப்புகள் எரிந்து நாசமாகிவிட்டதால் பல ஆயிரம் மக்கள் தங்கள் இருப்பிடம் விட்டு வேறு பகுதிக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தீயைக் கட்டுக்குள் வைக்க க்ரீஸ் நாட்டு அரசு போராடி வருகிறது. இருப்பினும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க வீரர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் க்ரீஸ் நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் ''சொந்த வீடு கண் முன் எரியும் பொழுது மக்கள் அடையும் துன்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் தீயை அணைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

ஆனால் அவை கைகொடுக்கவில்லை என்பதால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய அந்நாட்டு அரசாங்கம் 500 மில்லியன் யூரோ வரை ஒதுக்கியுள்ளது. தனது அரசு காட்டுத் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வரும் நிலையில், அந்த சம்பவத்திற்காகப் பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள நிகழ்வு அந்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்