பாழடைந்த வீட்டுக்குள் எடுத்த புகைப்படம்... "கொஞ்ச நாள் கழிச்சு திருப்பி பாக்குறப்போ".. கதி கலங்க வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமானுஷ்ய புலனாய்வாளர்கள் ஒரு பாழடைந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கே எடுத்த புகைப்படம் தொடர்பான செய்தி, பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | திருமணத்தன்று பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணப்பெண் .. "அவங்களுக்கு பேச்சே வரல".. நெகிழவைத்த வீடியோ

இங்கிலாந்தில் அமைந்துள்ளது Boscastle என்னும் கிராமம். இங்குள்ள பகுதியில் பழைய குடிசை ஒன்று இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமானுஷ்யம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் உறுப்பினர்கள் சிலர், Boscastle பகுதியில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கே சென்றுள்ளனர்.

அப்போது அங்கே இருந்த பாழடைந்த வீடு ஒன்றை குறித்து அறிந்து கொண்ட உறுப்பினர்கள், அங்கே ஏதோ புதைகுழி இருப்பது தொடர்பான பேச்சு இருப்பதையும் அறிந்துள்ளனர். தொடர்ந்து அந்த வீட்டிற்குள் குழுவினர் சென்ற போது, அதில் இருந்த ஒருவருக்கு
ஒருவிதமான வினோத உணர்வு தோன்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்த வீட்டிற்குள் ஜன்னல்கள் இல்லாததால், அதிகம் இருட்டாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அங்குள்ள பகுதிகளை புகைப்படங்களாகவும் அவர்கள் எடுத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து, சில நாட்கள் கழித்து அந்த பாழடைந்த வீட்டிற்குள் எடுத்த புகைப்படங்களை அதில் இருந்த பெண் ஒருவர் கேமராவில் பார்த்துள்ளார். அப்போது கடும் அதிர்ச்சி ஒன்று அந்த பெண்ணிற்கு காத்திருந்துள்ளது.

அவர் எடுத்த புகைப்படம் ஒன்றின் வலது பக்கத்தில், மேலே ஒரு குழந்தையின் உருவம் மங்கிய நிலையில் தெரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த பாழடைந்த வீட்டிற்குள் செல்லும் போது, எதையும் கண்டுபிடிக்காத அவர்கள் புகைப்படத்தில் குழந்தை உருவம் தெரிவதை கண்டு ஒரு நிமிடம் குழம்பி போயுள்ளனர். மேலும் மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்று ஆய்வுகளை அந்த அமானுஷ்ய ஆய்வாளர்கள் மேற்கொள்ள திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், ஒரு பக்கம் பலரும் மிரண்டு போனாலும் மறுபக்கம் இது நிஜமாக இருக்காது என்றும், எடிட்டிங்காக கூட இருக்கலாம் என்றும் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | 6 ஆவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்.. 7 ஆவது திருமணத்திற்கு ரெடி ஆன பெண்.. கட்டம் கட்டி தூக்கிய 6 ஆவது கணவர்

PHOTO, ABANDONED COTTAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்