800 ஆண்டு பழமையான மம்மியை தனது தோழி என கூறிய நபர்.. பெரு நாட்டில் விநோதம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 800 ஆண்டு கால பழமையான மம்மியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எலான் மஸ்க்காய நமஹ".. பூஜை போட்ட ஆண்கள் சங்கம்.. அவங்க சொன்ன காரணம் இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

மம்மி

பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் வகையில் அந்த உடலில் இருந்து கழிவுகளை அகற்றி, இறுக்கமான காற்று புகாத பெட்டிக்குள் வைத்துவிடுவார்கள். எகிப்து துவங்கி பல இடங்களிலும் மம்மிகள் இருப்பதை அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னமெரிக்க நாடான பெரு-வில் ஒரு இளைஞர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த மம்மி ஒன்றை கடந்த 30 வருடங்களாக வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.

தோழி

பெரு நாட்டை சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் ஜூலியோ சீசர் பெர்மெஜோ. 26 வயதான இவர் டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்த வேலையில் இருந்து விலகிய ஜூலியோ சீசர் அந்நிறுவனத்தின் பேக்கை தன்னிடத்தே வைத்திருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் காவல்துறையினரிடம் அவர் சிக்கியுள்ளார். அப்போது, பைக்குள் என்ன இருக்கிறது என அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அதிர்ச்சி

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த ஜூலியோ சீசரை கண்டு சந்தேகப்பட்ட அதிகாரிகள் பையை திறந்து பார்த்தபோது அப்படியே உறைந்துபோய்விட்டனர். பழங்கால மம்மி ஒன்று உள்ளே இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்து நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி. அந்த மம்மியானது பெருவின் லிமாவிற்கு தென்கிழக்கே சுமார் 1,300 கிலோமீட்டர்கள் (800 மைல்களுக்கு மேல்) தொலைவில் உள்ள பெருவியன் ஆண்டிஸில் உள்ள ஒரு பகுதியான புனோவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது வந்த ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என காலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இந்நிலையில், இதுகுறித்து அந்த இளைஞரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது தன்னுடைய ஆன்மீக தோழி எனவும் 30 வருடங்களுக்கு முன்னதாக தனது தந்தை இதனை கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், இத்தனை ஆண்டுகாலமாக அந்த மம்மியை தனது வீட்டில் வைத்து கவனித்து வந்ததாகவும் சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read | மகுடம் சூடும் மன்னர் சார்லஸ்.. தயாராகும் 700 ஆண்டு பழமையான அரியணை.. மிரள வைக்கும் பின்னணி..!

PERU, PRE HISPANIC MUMMY, BAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்