ஒசாமா பின்லேடன் ஒரு ‘தியாகி’.. நாடாளுமன்றத்தில் ‘புகழ்ந்து’ பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் ‘பிரதமர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் தொடர்பாக மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது.
இதற்கு அடுத்த நாள் வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவியதற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெறும் நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது. அவர் ஒரு தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் சொல்லாமல் ஒருவரை கொன்றது பெரிய அவமானம்’ என இம்ரான்கான் பேசியுள்ளார். இதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி ஷெர்ரி ரெஹ்மான், ‘ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்’ என தெரிவித்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா. அவர் என்றைக்கும் பயங்கரவாதிதான்’ என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை!.. பாகிஸ்தானியர் கைது!.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை!. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு!
- "சூது கவ்வும் தாஸ்க்கே டஃப் கொடுப்பாங்க போல!".. யார்ரா நீங்க.. டெலிவரி பையன் அழுததும் மனசு கேக்காம வழிப்பறி திருடர்கள் செய்த 'வேறலெவல்' காரியம்!
- 'பாகிஸ்தானில்' காணாமல் போன... இந்திய 'தூதரக' அதிகாரிகள்... பரபரப்பை கிளப்பிய சம்பவம்!
- "கணவர் உறவுகொண்ட பெண்களை பலாத்காரம் செய்ய, உத்தரவிட்ட பெண் பிரதமர்!" .. பாகிஸ்தான் வாழ் அமெரிக்க பெண் அடுக்கிய குற்றச்சாட்டுகள்!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- 'வெட்டுக்கிளி' கிலோ '20 ரூபாய்...' ஒரே நாளில் 'ரூ. 1,600' வருமானம் ஈட்டினேன்... 'விவசாயி பெருமிதம்...'
- 'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'
- "தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா?..." 'சமூக ஊடகங்களில்' தீயாய் பரவும் 'தகவல்...'
- "சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா?".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு!.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்!