VIDEO: 'திடீர்னு மேல பறந்த ஹெலிகாப்டர்...' 'ஒரு நிமிஷம் என்ன நடக்க போகுதுன்னே தெரியல...' - வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த திருமண வீடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் மண்டி பகுவாஹ்டின் மாவட்டத்தில் ஒரு இளம் தம்பதிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியின் போது திடீரென ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா மலர் இதழ்களும், பணமும் மழை போல தரையில் தூவப்பட்டன.

எப்போது திருமணத்தன்று ரோஜா இதழ்களை தூவுவது வழக்கம்தான். அதோடு பணமும் சேர்த்து வந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மட்டுமல்லாது மணமக்களையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது எனலாம்.

தன் சகோதரருக்கு திருமண நாளன்று மறக்கமுடியாத பரிசை வழங்க முடிவு செய்த மணமகனின் சகோதரர்கள், ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் ரோஜா இதழ்களையும், பணத்தையும் ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் அக்கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்