“இது நம்ம நாட்டுக்குள்ளையும் நுழைஞ்சிருச்சு”.. பரபரப்பு தகவலை வெளியிட்ட வடகொரிய அதிபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ‘மூல நோய் சிகிச்சை ரகசியம்’.. நாட்டு வைத்தியரை கடத்திச் சென்று செய்த கொடுமை.. 3 வருசம் கழித்து வெளியவந்த திடுக்கிடும் தகவல்..!

கடந்த 2019-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் வடகொரியா நாடு மட்டும் அங்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.  இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே நடமாடக்கூடாது என மக்களுக்கு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு மக்களிடம் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. அதனால் நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது. மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என அவர் பேசியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

NORTH KOREA, NATIONWIDE LOCKDOWN, வடகொரிய அதிபர், கொரோனா தொற்று

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்