“அறை முழுவதும் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்கள்!”.. நிர்வாணமாக உள்ளே சென்ற நபர்!.. ‘கண் விழித்ததும் அதிர்ந்த இளம் பெண் செய்த உடனடி காரியம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் சிறுமி மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் christian brueckner. 43 வயதான இவரைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பார்ப்பதற்கு அப்பாவியாக காட்சியளிக்கும் இவர் பல குற்றச் செயல்களில் தொடர்புடையவர் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபடுவது மற்றுமின்றி, தான் செய்த குற்றங்கள் குறித்து பெருமை அடித்துக் கொள்வதும் இவருடைய வழக்கம் என்பதால் பல ஆண்டுகளாக காணாமல் போன பிரிட்டன் சிறுமி மேட்லினின் வழக்கில் கிடைக்காமல் இருந்த துப்புகள் தற்போதுஇ கிடைத்துள்ளன. christian brueckner, தன் நண்பர் ஒருவரிடம் மேட்லின் குறித்த அத்தனை விஷயங்களையும் தானே உளறி இருக்கிறார். அந்த நண்பர் போலீஸாருக்கு அளித்த தகவலின்படி, சுமார் ஏழு குழந்தைகள் மாயமான அல்லது கொல்லப்பட்ட வழக்குகளில் brueckner தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே போர்ச்சுகலில் ஒரு அரை முழுவதும் சுற்றுலா வந்த ஒரு பிரிட்டன் இளம்பெண்கள் கூட்டம் தூங்கிக் கொண்டிருக்க, நிர்வாணமாக அந்த அறைக்குள் நுழைந்த brueckner அந்த அறையில் மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் தற்செயலாக விழித்துக்கொள்ள பதறியடித்துக்கொண்டு மற்ற பெண்களையும் எழுப்ப,  brueckner உடனே அங்கிருந்து தப்பி உள்ளார். இந்த விஷயத்தை கூட அந்த பெண்கள் கூறவில்லை. தனது நண்பர் ஒருவரிடம்  brueckner பெருமை அடித்துக்கொண்டிருந்துள்ளார். அந்த நண்பர் இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இப்படி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கொஞ்சமும் வருந்தாமல் தான் செய்த செயல்கள் குறித்து ஜம்பம் அடித்துக் கொண்டதாலேயே தற்போது brueckner சிக்கிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்