செல்ல நாயுடன் காணாமல் போயிருந்த கனடா இளம் பெண்.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்.! கதறி அழுத பெற்றோர்.

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. கனடாவின் போலீசாருக்குதான் இந்த தகவல் முதலில் கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரிட்டன் சாலையில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்.. அரண்டு போன அக்கம் பக்கத்தினர்.!

அதாவது கனடாவின் Kelowna-வை சேர்ந்த Chelsea Cardno என்பவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் அவ்வாறு வீட்டை விட்டு வெளியேசென்ற பின்னர், அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படி அவர் மாயமானதை அடுத்து அப்பெண்ணின் குடும்பத்தார் போலீசாரிடத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசாரும் அவருடைய குடும்பத்தாரும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வெள்ளம் பாய்ந்து சென்று தண்ணீர் நிறைந்து இருந்த ஒரு இடத்தில் நேற்று முன்தினம் Chelsea Cardno சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து போயினர்.

முதலில் இறந்தது Chelsea Cardno-ஆக இருக்காது என்று நம்பிக்கையுடன் இருந்த குடும்பத்தினருக்கு, அங்கிருந்த பிரேதம் அவருடையதுதான் என்கிற செய்தி இன்னும் நிலைகுலையச் செய்திருக்கிறது. Chelsea Cardno காணாமல் போன அதே நேரத்தில் ஆபத்தான உயர் நீர் நிலைகள் மற்றும் வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தண்ணீர் நிறைந்து இருந்த வயல் பரப்பில் தான் Chelsea Cardno-ன் சடலம் கிடைத்திருக்கிறது. இதேபோல் அவருடன் அவர் பாசமாக வளர்த்த செல்ல நாய்க்குட்டி காணாமல் போய் இருந்தது. ஆனால் Chelsea Cardno சடலத்துடன் இப்படி கிடைத்து இருக்கிறார் என்றால் நிச்சயமாக அவருடைய செல்ல நாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மேற்கொண்டு செல்ல நாய் பற்றிய தகவல்கள் தெரிய வரலாம் என்றும் போலீசார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

Also Read | ‘யார் நீங்க.?’.. ‘நான் அதிஷ்டம்’!.. tired ஆகுதுப்பா.. போயிட்டு நாளைக்கு வா.. கனடா பெண்ணுக்கு அடித்த யோகம்.!

KELOWNA WOMAN, CHELSEA CARDNO

மற்ற செய்திகள்