#VIDEO: 'தாய்' பாசத்துக்கு 'ஈடேதம்மா!'.. 'நெகிழ்ந்து' அழுத 'மகன்'!.. 'இதயம்' தொடும் 'சர்ப்ரைஸ்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செல்லப்பிராணிகளை நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிவிடக்கூடியவை என்பதை, நிச்சயமாக, நாம் உணர்ந்திருப்போம். அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வெளிவந்த வீடியோ ஒன்றில், ஒரு தாய் தனது மகனுக்கு ஒரு நாய்க்குட்டியை சர்ப்ரைசாக அளித்ததும், அவரது மகனும் சிறுவனுமானவன் கண்ணீர் விட்டழுது தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான்.

ஒரு சோபாவில் ஓய்வெடுத்தபடி மொபைல் ஃபோனுடன் பிஸியாக இருந்த அந்த சிறுவனுக்கு அந்த ஆச்சரியம் தனக்காக காத்திருக்கிறது என்பதே தெரியவில்லை.ப் அப்போது அவனது தாயார், விரைவில், தனது கைகளில் ஒரு நாய்க்குட்டியுடன் அந்த அறைக்குள் நுழைந்து, மகனிடம் காட்டியதும் சிறுவன் எதிர்வினையாற்ற ஏதுமின்றி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான்.  சில நொடிகளில் கண்ணீரைக் கட்டுப்படுத்தாமல் சந்தோஷத்தில் அழ, நாய்க்குட்டியோ சிறுவனுடன் வாஞ்சையுடன் சென்று விளையாடிடத் தொடங்குகிறது.

சிறுவன் தனது முழுமையான உணர்ச்சிவசத்தை வெளிப்படுத்தி, தாய்ப்பாசத்துக்கு தனது நெகிழ்ச்சியையும், தனக்கு பிடித்த செல்லப்பிராணி பரிசாக கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தும் இந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ந்துபோய் கமெண்டுகளை கொடுத்துவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்