அது மட்டும் நடந்திருந்தா.. "ஒருவேளை இப்போ உயிரோட கூட இருந்துருப்பாங்க.." மர்லின் மன்றோ பற்றி மருமகளின் பரபரப்பு 'கருத்து'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான நடிகையாக மட்டுமில்லாமல், உலக அரங்கில் ஒரு சினிமாவின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ.

Advertising
>
Advertising

Also Read | "அம்மா சொன்ன அந்த விஷயம் தான்.." போனில் வந்த அழைப்பு.. ஆறே மாசத்தில் கோடீஸ்வரரான 'கான்ஸ்டபிள்'..

மர்லின் மன்றோ என்ற பெயரைக் கேட்டாலே, வெள்ளை நிற கவுன் உடையில், காற்றடிக்கும் போது, மர்லின் மன்றோ நிற்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் தான், பலருக்கும் நினைவில் வரும்.

தனது நடிப்பாலும், அழகாலும், கவர்ச்சியாலும் இனி மார்லின் மன்றோ போல ஒரு நடிகை உலக அளவில் உருவாக மாட்டார் என்ற அளவிற்கு பிரபலம் ஆனவர் இவர்.

ஒரு பக்கம், எந்த அளவுக்கு மர்லின் மன்றோ பிரபலமாக இருந்தாரோ, அதே அளவுக்கு அவரது வாழ்க்கையில் நிறைய துக்கங்களும் இருந்தது. 36 வயதில், மர்லின் மன்றோ மர்மமான முறையில் உயிரிழந்தது, இன்று வரை ஒரு புரியாத புதிராகவே நீடித்து வருகிறது. தற்கொலை, கொலை என பல்வேறு காரணங்களை பல்வேறு ஆட்கள் தெரிவித்து வந்தாலும், உண்மை என்ன என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

சமீபத்தில், மர்லின் மன்றோ இறந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில், பலரும் அவரை நினைவு கூர்ந்திருந்தனர். அதே போல, மர்லின் மன்றோ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, அனா டி அர்மாஸ் மார்லின் மன்றோ ஆகவும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், மர்லின் மன்றோவின் தந்தை வழி மருமகள் ஒருவர், தற்போது மர்லின் மன்றோ குறித்து தெரிவித்துள்ள கருத்து, இணையத்தில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தின் ஆதரவு எதுவும் இல்லாமல் மார்லின் மன்றோ இருந்து வந்த நிலையில், அது பற்றி பேசிய அவரது தந்தை வழி மருமகளான 76 வயதாகும் Francine, "மர்லினின் தந்தை மட்டும் அவரை அரவணைத்து இருந்தால், அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். ஒரு மகிழ்ச்சியான குடும்பத்துடன் சிறந்த ஆதரவும் மர்லினுக்கு கிடைத்திருக்கும். அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருப்பதை நான் அறிந்தேன். ஆனால், அவர் எப்போதும் தந்தையின் அன்பிற்காக ஏங்கினார். எனது தாத்தாவும், மர்லினின் தந்தையுமான சார்லஸ் மிகவும் புத்திசாலி. மர்லினும் அதே போல தான் இருந்தார்.

எனது தாத்தா மட்டும் மகளான மர்லினை அரவணைத்திருந்தால், அவருடைய வாழ்க்கையே மிக வித்தியாசமாக மாறி இருக்கலாம். யாருக்கு தெரியும், ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் மர்லின் மன்றோ இன்று நம்முடன் உயிருடனும் இருந்திருக்கலாம்" என Francine தெரிவித்துள்ளார். தந்தையின் அன்பு மர்லினுக்கு கிடைக்கவில்லை என்பது பற்றி, மார்லின் மன்றோவின் தந்தை வழி மருமகள் என கூறப்படும் Francine சொன்ன விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | முதல்'ல பேஸ்புக், அப்புறமா வாட்ஸ்அப்'ல.. வீடியோ காலில் வந்த பெண்??.. மறுநாளே தலையில் விழுந்த துண்டு

MARILYN MONROE, FATHER LOVE, MARILYN MONROE NIECE, மர்லின் மன்றோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்