லாட்டரியில் கிடைச்ச ரூ.90 கோடி.! ஆனா அடுத்தடுத்த வருசத்தில் காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. "ஏன்டா ஜெயிச்சோம்ன்னு ஆயிடுச்சு"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, லாட்டரியில் ஒருவருக்கு பெரிய பரிசு தொகை கிடைத்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

நியூசிலாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது கனவில் வந்த எண்கள் மூலம், மார்க் லிப்ஷாம் என்ற நபர், லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தார். இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு, சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில், சுமார் 93 கோடி ஆகும். லாட்டரியில் இப்படி ஒரு பெரும் பரிசு விழுந்ததால், டிரக் ஓட்டுநராக இருந்த மார்க், அந்த வேலையை விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

லாட்டரியை வென்றாலும் ஏற்கனவே வாழ்ந்த வீட்டில் எந்த செலவும் செய்யாமல், அப்படியே வாழ்ந்து வந்துள்ளார் மார்க். கையில் பணம் இருந்ததால், அதனை நினைத்து மனஉளைச்சலும், விரக்தியும் மார்க்கிற்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்க் லிப்ஷாமின் பக்கத்து வீட்டுக்காரர், பணத்தை பற்றி நன்றாக தெரிந்தவர் என்று கூறி, கிம் ஹெல்ம்ப்ரைட் என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் பின்னர், கிம் என்ற பெண், மார்க் லிப்ஷாமின் நிதி உள்ளிட்ட விவரங்களை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் மார்க்கின் உடல்நிலை மற்றும் வாழ்க்கை தொடர்பான ஆலோசனைகளையும் கிம் வழங்கி வந்துள்ளார். இப்படி தனது உடல்நிலை தொடங்கி, நிதி விவரங்கள் வரை பார்த்து கொண்டதற்காக, கிம்மிற்கு சுமார் 60,000 பவுண்டுகளை மார்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கிம்முடன் ஒரு ஒப்பந்தத்திலும் மார்க் கையெழுத்திட்டு கொடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, 2019 டிசம்பரில், நிலம் மாற்றம் சொத்துக்கள் வாங்க திட்டம் போட்ட மார்க், ஆலோசகரான கிம்மிடம் 1.5 மில்லியன் பவுண்டுகளை கொடுத்துள்ளார். அதன் பின்னர், மார்க்கிடம் பேசுவதை கிம் நிறுத்திய நிலையில், தனது வங்கியில் 6.2 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே இருந்ததை கண்டு ஆடி போயுள்ளார்.

இதனையடுத்து, மார்க் வங்கி கணக்கில் இருந்து நிறைய பணத்தினை கிம் எடுத்து செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், இது தொடர்பாக வழக்கை மார்க் தொடர்ந்த நிலையில், தனது ஆலோசகர் கிம்மிற்காக மார்க் கையெழுத்திட்ட பாத்திரத்தில், பணத்தை எப்போது வேண்டுமானாலும் கிம் எடுத்துக் கொள்ளலாம் என மார்க் உறுதி மொழி அளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், வழக்கும் மார்க் லிப்ஷாம் பக்கம் திரும்பவில்லை என கூறப்படும் நிலையில், தான் லாட்டரியில் ஜெயித்த பணத்தில் பாதிக்கு மேலும் இழந்து விட்டார். தற்போது, மீதமுள்ள பணத்தை கொண்டு ஒரு நல்ல வீட்டில், தனது மனைவியுடன் மார்க் லிப்ஷாம் வசித்து வருகிறார்.

லாட்டரி வென்றிருக்கவே கூடாது என கருதும் மார்க் லிப்ஷாம், லாட்டரியில் வெற்றி பெற்றால் யாரிடமும் அதனை தெரியப்படுத்தாதீர்கள் என்றும் மற்றவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

LOTTERY, MAN, LIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்