Mortuary'ல் இருக்கும் உடலை பார்க்க போன மருத்துவர்.. பையை திறந்ததும் கண்ட அதிர வைக்கும் காட்சி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மருத்துவர் ஒருவர், பிணவறை சென்ற போது கண்ட காட்சியும், அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 10 ஆண்டுக்கு முன்பு கிடைத்த உடல்.. தீவிர விசாரணையில் தெரிய வந்த 53 வருட மர்மம்!!.. கதிகலங்கி போயிடுச்சு!!

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, Kevin Reid என்ற நபர் (வயது 55) அனுமதிக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி கெவின் இறந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலும் பிணவறையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் கெவின் இறந்ததை மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் தான் உறுதி செய்து பதிவும் செய்துள்ளனர். ஆனால், அதே வேளையில் இறப்பு சான்றிதழுக்காக கெவின் இறந்ததை மருத்துவர் தான் உறுதி செய்தாக வேண்டும். இதனால், கெவின் இறந்ததாக அறிவிக்க மறுநாள் மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கெவின் உடல் வைக்கப்பட்டிருந்த பையை திறந்து கெவின் உடலை பரிசோதிக்க முற்பட்டுள்ளார் மருத்துவர். அந்த சமயத்தில், கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறியது. கெவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சற்று மாறி இருந்துள்ளது. மேலும், பைக்குள் இருந்த கெவினின் கண்கள் திறந்து இருப்பதையும், அவரது கையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதையும் பார்த்து அந்த மருத்துவர் ஆடிப் போயுள்ளார்.

இதனால், உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக கூறி கெவினின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். அதிலிருந்து விடுபட கெவின் முயற்சிகள் மேற்கொண்டு, அதன் பின்னர் இறுதியில் அவர் இறந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெட்ட வெளிச்சமாகவே, கடும் பரபரப்பும் உருவானது.

இதனால், கெவின் இறந்த தேதியை ஒரு நாள் அதிகமாக மாற்றி இறப்பு சான்றிதழில் பதிவு செய்யவும் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நோயாளி உயிரிழப்பதற்கு முன்பாகவே பிணவறையில் அவரது உடல் வைக்கப்பட்ட சம்பவம், அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர், தங்களின் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read | "என் பாய் ஃபிரண்ட் கூட உனக்கென்ன பேச்சு??".. உச்சகட்ட கோபத்தில் இருந்த சகோதரி.. தூங்கிட்டு இருந்தப்போ இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

MORGUE, MAN, SEND, ALIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்