குழந்தை பிறப்பு சான்றிதழில் பெரிய ‘ட்விஸ்ட்’ வச்ச மனைவி.. கையெழுத்து போட வந்த கணவருக்கு காத்திருந்த ‘ஷாக்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மனைவி எழுதி இருந்த பெயரை பார்த்து கணவன் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த தம்பதிக்கு, சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்வதற்காக கணவர் சென்றுள்ளார். அந்த சான்றிதழை தனது மனைவி நிரப்பி கணவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து சான்றிதழை பிரித்துப் பார்த்த கணவர், குழந்தைக்கு வைக்கப்பட்டிருந்த பெயரை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அதில் முதலிலும், கடைசியிலும் தனது முன்னாள் காதலனின் பெயர் வருமாறு அப்பெண் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 8 வருடங்களாக அவர்கள் காதலித்து வந்ததும், அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே சண்டை வெடித்துள்ளது. இது எதர்ச்சையாக நடந்த சம்பவம் என்றும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் மனைவி கூறுவதாக கணவர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி, அது தனது குழந்தைதானா என்பதை உறுதி செய்ய வேண்டும் என கணவர் முறையிட்டு வருகிறார். ஆனால் குழந்தைக்கு அந்த பெயர்தான் வைக்க வேண்டும் என மனைவி விடா பிடியாய் இருப்பதாகவும், அதனால் தன்னுடன் பேசுவதில்லை என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

News Credits: Mirror

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்