'பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிக் கொண்டிருந்த MP'.. ‘திடீரென முகத்தில் ஓங்கி குத்துவிட்ட நபர்!’.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் முகத்தில் ஒருவர் குத்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு தலைநகர் லிமாவில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் பதவியிலிருந்து மார்ட்டின் விஸ்கார்ரா நீக்கப்பட்டதுடன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தலைவர் மானுவேல் மெரினே பதவியேற்றார். இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ புர்கா, மார்ட்டின் விஸ்கார்ராவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளித்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த நபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ புர்காவின் முகத்தில் திடீர் என பஞ்ச் ஒன்று கொடுத்து அதிர வைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்