'4500 மைல்கள்' தாண்டி வந்து..'சர்ப்ரைஸ்' கொடுத்த மருமகன்.. மாமனாரால் சுடப்பட்டு பலி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதற்காக 4500 மைல்கள் தாண்டி வந்த மருமகன் மாமனாரால் சுடப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டென்னிஸ்(61) கடந்த செவ்வாய் இரவு 11.30 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் ஏதோ சத்தம் கேட்டு கையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.அங்கிருக்கும் புதரில் இருந்து குதித்த மனிதரை பார்த்தும் டென்னிஸ் யோசிக்காமல் சுட்டுவிட்டார்.

ஆனால் அது நார்வேயில் வசிக்கும் அவரது மருமகன் கிறிஸ்டோபர் பெர்கன்(37) என்பது சுட்ட பின்னர் தான் அவருக்கு தெரிய வந்துள்ளது.இதைத்தொடர்ந்து உடனடியாக 911-க்கு கால் செய்து விட்டு, தனது மருமகனை காப்பாற்றும் பணிகளில் டென்னில் ஈடுபட்டார்.ஆனால் சுடப்பட்டது நெஞ்சில் என்பதால் ஏராளமான ரத்தம் வெளியாகி கிறிஸ்டோபர் இறந்து விட்டார்.

அதற்கு மறுநாள் டென்னில் 62 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதால் சர்ப்ரைஸ் கொடுக்க அவரது மருமகன் வந்த விவரம் பின்னர் தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு கருதி டென்னிஸ் சுட்டதால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்