VIDEO: ‘யாருப்பா நீ’!.. விமான இறக்கையில் தொங்கிய நபர்.. மிரண்டுபோன ‘பைலட்’.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் மர்மநபர் ஒருவர் திடீரென ஏறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது மர்மநபர் ஒருவர் விமான நிலையத்தின் வேலியை தாண்டி விமான ஓடுதளத்திற்குள் நுழைந்தார்.

இதைப் பார்த்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் விமானத்தின் இறக்கை பகுதி மீது மீறி ஏறினார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விமான இறக்கையில் அங்கும் இங்கும் ஓடிய நபர், ஒருகட்டத்தில் ஷூக்களை கழற்றிவிட்டு இறக்கையின் முனைப்பகுதியில் ஏற முயன்றார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுற்று வளைத்தனர். திடீரென இறக்கையின் முனைப்பகுதியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.

உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் விமானத்தின் இறக்கை மீது ஏறிய நபர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. விமானத்தில் ஆபத்து நிறைந்த எந்த ஒரு பொருளும் இல்லை என உறுதியான பின்னர் விமானம் சுமார் 4.45 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்