'நத்தை எடுக்க சென்ற சிறுவன்...' 'கண் இமைக்கும் நேரத்தில் நீரிலிருந்து பாய்ந்த முதலை...' '5 நாட்கள் கழித்து முதலையை பிடித்தபோது...' - கதறி துடித்த பெற்றோர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மலேசியாவில் 14 வயது சிறுவனை முதலை காலைக் கவ்வி நீருக்குள் இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்கி கான்யா (14) எனும் சிறுவன் ஆற்றில் நத்தைகளை சேகரிக்கச் சென்றபோது, திடீரென்று நதியில் இருந்து முதலை ஒன்று அவரது காலைக் கவ்வி நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

தகவல் கேள்விப்பட்ட மீட்புக்குழுவினரால் 4.5 மீட்டர் நீளமுள்ள முதலையை ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் பிடித்துள்ளார்கள்.

அவர்கள் முதலை வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது, அந்த சிறுவனின் உடைகள் மற்றும் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

உடல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் சிறுவனது குடும்பத்தினர் முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக அந்த உடற் பாகங்களை பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்