3 நிமிசத்துல 20 தடவ கேட்ட துப்பாக்கி சத்தம்.. சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி இளம்பெண் போட்ட 'பேஸ்புக்' பதிவு.. திகிலில் உறைய வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

3 நிமிடங்களில் சுமார் 20 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடம் சென்ற போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | 100 வருசத்துக்கு முன்னாடி கட்டுன 'மரவீடு'.. பிரம்மித்து பார்க்கும் நெட்டிசன்கள்.. அதுல இருக்குற ஒரு விஷயம் தான் இதுக்கு காரணம்"!!

US-ஐ அடுத்த Massachusetts அருகே அமைந்துள்ளது Lynn என்னும் பகுதி. அங்குள்ள போலீசாருக்கு மதிய வேளையில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதன் படி, அங்கே உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே, 3 நிமிடங்களில், 20 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனையடுத்து, புகார் வந்த இடத்திற்கு சென்று அங்கே சத்தம் கேட்ட வீட்டிற்கும் சென்று அவர்கள் பார்த்துள்ளனர். அப்போது, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆணும், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதன் பின்னர், அருகேயுள்ள கார் பார்க்கிங் ஒன்றிலும் சத்தம் கேட்டதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கேயும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இவை அனைத்தையும் விட, கடைசியாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் கார் பார்க்கிங்கில் நின்ற காரில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அடுத்தடுத்து இப்படி நான்கு பேர் துப்பாக்கி குண்டு பட்டு இறந்து கிடந்த நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

கடைசியில், காரில் உயிரிழந்து கிடந்த இளம்பெண் Sharifi என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் அபார்ட்மெண்ட் ஒன்றில், தனது தந்தை மற்றும் சகோதரியின் கணவரை சுட்ட பின்னர், கார் பார்க்கிங்கில் இருந்த சகோதரியின் கணவரின் தந்தையையும் அவர் சுட்டு விட்டு, இறுதியில் தனக்கு தானே விபரீத முடிவை Sharifi எடுத்துள்ளார் என்றும் போலீசாருக்கு தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, அனைவரையம் சுடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, Sharifi தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தான், போலீசாரை இன்னும் திடுக்கிட வைத்துள்ளது.

தனது சகோதரியை அவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளாக அதிகம் துன்பறுத்தி வந்ததாகவும், இருவரது பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிந்த பிறகும், அவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றும் Sharifi குறிப்பிட்டுள்ளார். எனது சகோதரியை எப்போதும் அடித்து துன்புறுத்தி வந்த கணவரை தட்டிக் கேட்க யாருமே இல்லை என்பதால், அவர் அதையே தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் என்றும் Sharifi குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரிக்கு நேர்ந்த துன்பம் காரணமாக, இப்படி ஒரு செயலில் Sharifi ஈடுபட்டிருக்கலாம் என்றும், மேலும் தனது கடைசி பேஸ்புக் பதிவில் தனது சகோதரிக்காக சில வார்த்தைகளை அவர் குறிப்பிட்டு வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

சகோதரியின் கணவர் அவரை கொடுமை செய்து வந்தததால், விரக்தியில் இருந்த இளம்பெண் செய்த காரியம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | வற்றிய நீர்.. துருபிடித்து கிடந்த 'பேரல்'.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ செம ஷாக்.. விசாரணையில் போலீஸ்.. 50 வருச மர்மம்!!

LYNN WOMAN, FACEBOOK POST, SISTER, BROTHER IN LAW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்