லாட்டரி ஜெயிக்க போறதா கனவு கண்ட மனுஷன்.. இரண்டே வாரத்தில் தாறுமாறாக அடித்த அதிர்ஷ்டம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருவரது வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த மாதிரியான அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. வாழ்க்கையில் திடீரென அவர்கள் எதிர்பாராத ஒரு அதிர்ஷ்டம் அடித்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வகையில் அந்த சம்பவம் அமைந்திருக்கும்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "லவ் டுடே படத்துல வர்ற மாதிரி.. பிளாக்மெயில் நடந்தா"... இதை செய்யணும்.. மேடையை அதிர வைத்த செளமியா அன்புமணி!!  

அதே போல, இன்னொரு பக்கம் லாட்டரி டிக்கெட் வாங்குவதன் மூலம் பலரது வாழ்விலும் ஏதாவது ஒரு திருப்புமுனை நிகழும் சம்பவங்களும் அரிதாக பல நாடுகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

லாட்டரி மூலம் மாறும் வாழ்க்கை

கேரளா, கனடா, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தங்களின் வாழ்வில் நினைத்து பார்க்காத ஒரு சமயத்தில் திடீரென லாட்டரி டிக்கெட் மூலம் பெரிய பரிசு தொகை விழுந்து அவர்கள் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறவும் செய்யும். இது தொடர்பான பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். இந்த நிலையில் கனடாவை சேர்ந்த ஒரு நபருக்கு லாட்டரி மூலம் மில்லியன் டாலர்கள் அடித்துள்ள சூழலில், அதன் பின்னணியில் உள்ள ஒரு விஷயம் தான் தற்போது அங்கே பேசு பொருளாக மாறி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

கனவில் வந்த வெற்றி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிராப்டன் என்னும் பகுதியில் வசித்து வருபவர் லெமோர் மோரிசன். இவர் தன்னுடைய இருபது வயது முதல் லாட்டரியில் விளையாடி வருவதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் ஒரு மில்லியன் டாலர் தொகை, லாட்டரியில் வென்றதாக கனவு ஒன்றை மோரிசன் கண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. தான் கனவில் கண்டது போல நிஜ வாழ்க்கையில் நடக்கும் என நினைத்து, லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கலாம் என மோரிசன் எண்ணி உள்ளார்.

லாட்டரியில் கிடைத்த பரிசு

அப்படி மோரிசன் வாங்கிய லாட்டரிக்கு சுமார் 2,50,000 கனேடிய டாலர்கள் பம்பர் பரிசாக விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஆகும். மேலும் அவர் கனவில் கண்ட தொகைக்கு நான்கில் ஒரு பங்கு பரிசு கிடைத்தாலும் இது பற்றி திருப்தி அடைவதாக கூறும் லெமோர் மோரிசன், இந்த வெற்றிக்கு இரண்டு வாரங்கள் முன்பு ஒரு மில்லியன் டாலர் வென்றதாக கனவு கண்டதாகவும் ஆனால் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் கிடைத்தாலும் இந்த வெற்றிக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்றும் தனது காசோலை வாங்கும் போது கூறியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் தான் வென்ற பணத்தில் தனது மனைவியுடன் விடுமுறைக்கு செல்ல இருப்பதாகவும் மீதமுள்ள பணத்தை முதலீடு செய்ய விரும்புவதாகவும் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Also Read | மகளிர் தினத்தில் பிறந்த மகள்.. மீண்டும் தந்தையான உமேஷ் யாதவ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

LOTTERY, LOTTERY PLAYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்