வீட்டு பணியாளருடன் காதல்.. தனியாக இருந்த கோடீஸ்வர பெண் எடுத்த முடிவு.. "இது தான் அவரு மேல எனக்கு 'Love' வர காரணம்.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதலுக்கு கண்ணில்லை என்ற ஒரு சொல் உள்ளது. அதாவது, காதலுக்கு வயதோ, அந்தஸ்தோ அல்லது நிறம் என எந்த விஷயமும் புலப்படாது.

Advertising
>
Advertising

Also Read | இரவில் உணவு ஆர்டர் செய்த பெண்.. பார்சலுடன் வந்த ஊழியர்.. "அடுத்த பத்து நிமிஷம் நடந்த விஷயம் தான் இன்னிக்கி செம Trending!!"

மனதை மட்டுமே முக்கியமாக பார்த்து வரும் இந்த காதலில் இருவர் விழுந்தது தொடர்பான கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான இவர், தனது மிக பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால், தனது வீட்டில் வேலைகளை செய்து அதனை பராமரித்துக் கொள்ள ஒரு பணியாளையும் நசியா தேடி வந்துள்ளார். அப்போது, அவரது தோழி ஒருவர் சுபியான் என்ற நபரை வீடு வேலைகள் செய்வதற்கு சிபாரிசு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சுபியான் என்பவருக்கு நல்ல சம்பளம் கொடுத்து, வேலைக்கும் அமர்த்தி உள்ளார் நசியா.

இந்நிலையில் தான், தனது வீட்டு பணியாளரான சுபியான் மீது நசியாவுக்கு காதல் உருவாகி உள்ளது. சுபியானின் எளிமை குணம், பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளால் அவர் மீது அதிகம் ஈர்க்கப்பட்டார் நசியா. இதன் பின்னர், தனது காதலையும் சுபியானிடம் நசியா வெளிப்படுத்தி உள்ளார். இதனைக் கேட்டதும் பணியாளான சுபியான் அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, மயக்கத்தில் இருந்து மீண்ட சுபியான், தனது முதலாளி அம்மாவின் காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது பற்றி பேசும் நசியா, "சுபியான் தன்னை ஒரு மதிப்புமிக்க நபராகவும் நிரூபித்துக் கொண்டார். நான் நோய் வாய்ப்பட்டால் கூட, நல்ல படியாக என்னை பார்த்துக் கொண்டு மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்து, சமையல் செய்து கவனிப்பார்" என நசியா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பணம், தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி, தூய்மையான இதயத்தால், இவரது காதல் தனித்து விளங்குவதுடன் பலமாகவும் திகழ்கிறது. நசியா, சுபியானை சல்மான் கானுடன் ஒப்பிடும் நிலையில், சுபியான் தனது காதல் மனைவி நசியாவை கத்ரீனா கைப்புடன் ஒப்பிடுகிறார். பணக்கார பெண் ஒருவர், தனது வீட்டு பணியாளர் மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.

Also Read | ராணுவ பயிற்சி முடிந்ததும்.. பயத்தில் இருந்த இளைஞர்.. விபரீத முடிவு நேர்ந்த அடுத்த நாளே பணியில் சேர வந்த 'ஆர்டர்'!!

ISLAMABAD, WOMAN, LOVE, SERVANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்