'இத கேக்க தான் இத்தனை நாள் காத்திருந்தோம்'... 'இனிமேல் மாஸ்க் வேண்டாம்'... அதிரடியாக அறிவித்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டாம் என்ற உத்தரவு ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது கொரோனா பதிப்பிலிருந்து மீண்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 52%க்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பெருமளவு செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, தென்கொரியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பொது வெளியில் முகக்கவசங்கள் அணிய வேண்டாம் என்று அறிவித்துள்ளன.

மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்