உலகத்திலயே 'Unlucky' ஆன மனுஷன் இவரு தான் போல".. சோதனை முடிவில் தெரிய வந்த அதிர்ச்சி.. "ஒரே நேரத்துல இவ்ளோ பிரச்சனையா??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வந்த இத்தாலியருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முடிவுகள் சொன்ன விஷயம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"

இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன், ஐந்து நாள் சுற்றுலாவாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

அப்படி அவர் சென்று விட்டு, இத்தாலிக்கும் திரும்பி உள்ளார். சொந்த ஊர் திரும்பி சுமார் 9 நாட்களுக்கு பின்னர், அந்த நபருக்கு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இடுப்பு பகுதியில் வீக்கம் என பல அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அந்த நபரும் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, முதலில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. முன்னதாக, அந்த நபருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் அந்த நபரின் இடது கைப் பகுதியில், ஏதோ கட்டி உருவாகி கொப்புளங்கள் போல தோன்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மீண்டும், அவரது உடலில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த நபருக்கு குரங்கம்மை மற்றும் HIV இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அந்த நபருக்கு கொரோனா, குரங்கம்மை மற்றும் HIV இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். முன்னதாக, ஸ்பெயினுக்கு அந்த நபர் சுற்றுலா சென்ற போது, ஒரு நபருடன் உடலுறவு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசும் ஆய்வாளர்கள், குரங்கம்மை மற்றும் கொரோனா தொற்று ஒன்றுடன் ஒன்று சேரலாம் என்றும் உடலுறவு மூலம் இவை பரவுவதற்கு முக்கிய வழியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல, எச்.ஐ.வி கூட சமீபத்தில் தான் அந்த நபருக்கு உண்டாகி இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலியில், முதல் முறையாக ஒரு நபருக்கு இப்படி கொரோனா தொற்று, குரங்கம்மை மற்றும் எச்.ஐ.வி என ஒரே நேரத்தில் இருப்பதால், நோய்த் தொற்று அந்த நபரின் உடல்நிலையை எப்படி மோசமாக்கும் என்பதும் சரிவர தெரியாது என மருத்துவர்கள் கூறி உள்ளனர். மேலும், அந்த நபர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை மற்றும் எச்.ஐ.வி இருக்கும் விஷயம், பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

Also Read | "ஹே, பேன்ட் பாக்கெட்டுல என்னப்பா அது?".. விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய வாலிபர்.. "பல வருசமா இத தான் வேலையா வெச்சு இருக்காராம்"

ITALY MAN, SPAIN, TOUR, INFECT, SYMPTOMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்