மின்னல் முரளி கத மாதிரியே இருக்கு.. நேரடியாக தாக்கிய 'மின்னல்'.. உயிர் பிழைத்த அதிசயம்.. எப்படி தப்பிச்சாரு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமீபத்தில், மலையாள திரைப்படமான 'மின்னல் முரளி', நெட்ப்ளிக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

Advertising
>
Advertising

மலையாள திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், ரிலீஸ் ஆன நாள் முதல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கதைப்படி, நடிகர் டோவினோ தாமஸ் மீது மின்னல் பாய்ந்து தாக்கும்.

அதில் இருந்து அதிசயமாக உயிர் பிழைக்கும் அவருக்கு, சூப்பர் ஹீரோ சக்திகள் எல்லாம் கிடைக்கிறது. இந்நிலையில், சூப்பர் பவர் மட்டும் கிடைக்காமல், ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது.

கடும் மழை

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா என்னும் நகரின் வடக்கு பகுதியில், இயந்திரங்களை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக, மழை நேரத்தில் பணிகளும் நடைபெற்று வந்துள்ளது. அப்போது, கையில் குடையுடன் அங்கிருந்த தொழிலாளி ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

தாக்கிய மின்னல்

கடுமையான மழையும் பெய்து கொண்டிருக்க, திடீரென பயங்கரமான மின்னல் ஒன்று அந்த தொழிலாளி மீது விழுந்து தாக்கியது. மின்னல் பாய்ந்ததும், அவரைச் சுற்றி தீப்பொறிகள் பறந்தது. உடனடியாக, தரையிலே விழுந்து விட்டார். சக தொழிலாளி மீது மின்னல் தாக்கியதைக் கண்டு, அங்கிருந்த மற்ற தொழிலாளிகள் பதறிப் போயினர். உடனடியாக, அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

எப்படி சாத்தியம்?

மின்னல் தாக்கிய நிலையில், மிகவும் அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் உயிர் பிழைத்து விட்டார். ஆனால், அவரது கைகளில் மட்டும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, வீட்டிற்கு திரும்பிய அவர், வேகமாக குணமடைந்து வருகிறார். மின்னல் தாக்கிய பிறகும், ஒருவர் உயிர் பிழைத்தது ஆச்சரியத்தையும், அதே வேளையில் சிலருக்கு எப்படி பிழைத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வாக்கி - டாக்கி 

அந்த தொழிலாளி கையில் இருந்த வாக்கி - டாக்கி தான், மின்னலை ஈர்த்து, அவர் உயிர் பிழைக்க காரணமாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அவர் கையில் குடையை எடுத்துச் சென்றது, மின்னல் அவர் மீது தாக்குவதற்கு, அதிக வாய்ப்பய் ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 

 

வைரலாகும் வீடியோ

மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும், இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து தான் போயுள்ளனர் என்றே கூற வேண்டும்.

LIGHTNING, MINNAL MURALI, SURVIVE, இந்தோனேஷியா, மின்னல் முரளி, அதிசயம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்