அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

இந்தோனேசியா நாட்டில் இன்று (14.12.2021) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின்  மௌமரேவில் இருந்து 95 கிலோமீட்டர்  வடக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் நிலத்தட்டுக்கள் அசைவு காரணமாக அடிக்கடி இதுபோல் நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

EARTHQUAKE, INDONESIA, TSUNAMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்