'சரி, விடு யாரோ ஒருத்தருக்கு லாட்டரி அடிச்சிருக்கு'... 'மனதை தேற்றிய பெண்'... ஆனா எதிர்பாராமல் நடந்த திருப்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

யாரோ ஒருத்தருக்கு லாட்டரி அடித்துள்ளது என நினைத்த பெண்ணுக்கு பெரும் சர்ப்ரைஸ் காத்திருந்தது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஜெரிகா தாமஸ். இவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் தனது அன்றாட பணிகளைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அதற்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில் வேறு யாரோ ஒருவருக்கு 32,700 டாலர் பரிசு விழுந்துள்ளது என மனதைத் தேற்றி விட்டு அலுவலகம் சென்றுள்ளார்.

இந்நிலையில் எதேச்சையாக லொட்டோ செயலியில் பார்த்தபோது அந்த பரிசு ஜெரிகா தாமஸுக்கு தான் விழுந்துள்ளது என்பதை அறிந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன அவர், உடனே இதுகுறித்து தனது நண்பர்களுக்கு போனில் தகவலைச் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை.

இதையடுத்து பரிசு குறித்த விவரங்களை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளார். அதன்பின்னர் தான் அவரது நண்பர்கள் அதனை நம்பியுள்ளனர். இதனால் அவரது நண்பர்கள் பட்டாளமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

மற்ற செய்திகள்