"எல்லாரும் இறக்க போறோம்!".. ‘விமானத்தில்’ பெண் பயணி செய்த காரியம்.. பதைபதைப்புக்குள்ளான பயணிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்காட்லாந்தில் விமானத்திலிருந்த பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறி அச்சுறுத்தியதால், விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டார்.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்திலிருந்து ஈசி ஜெட் விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஏறி இருக்கிறார். அப்போது முகக் கவசம் அணியாமல் இருந்த அவரை மற்றவர்கள் எச்சரித்தனர். மேலும் அப்போது தனக்கு கொரோனா இருப்பதாகவும், இதனால் அனைவரும் இறந்து விடப் போகிறோம் என்றும் தொடர்ந்து அந்த பெண் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததை பலரும் தொந்தரவாக உணர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அவர் பேசியவிதமும், நடந்து கொண்ட விதமும் அங்கு இருந்தவர்களை, அதிருப்தி அடைய வைத்துள்ளது. இதனால் விமான நிறுவன ஊழியர்கள் அப்பெண்ணை அழைத்துச் சென்று விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்