திருட்டு 'மாங்காய்'க்கு ருசி அதிகம் தான்... அதுக்காக இவ்ளோ 'உயரமா' தாண்டி குதிக்கிறது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதனை உண்மையாக்குவது போல யானை ஒன்று சுவர் ஏறிக்குதித்து மாங்காய் திருடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சாம்பியா நாட்டின் தெற்கு லுங்வா தேசிய பூங்கா பகுதியில் எம்ஃபுவே என்னும் தங்கும் விடுதி உள்ளது. அங்குள்ள விடுதியின் சுவரை ஆப்பிரிக்க யானை ஒன்று அடிமேல் அடிவைத்து தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து விடுதி மேலாளர் கூறுகையில், '' யானை மிகவும் நேர்த்தியாக சுவரைத்தாண்டி உள்ளே வந்தது கண்டு, சுற்றுலா பயணிகள் வியந்து போயினர். அது இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்கும் என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்தார்.

அதேநேரம் உள்ளே வந்த யானை திரும்பி செல்வதற்கு முன் அங்குள்ள மாமரத்தில் இருந்து மாங்காய்களை திருடி சாப்பிட்டதாக, அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்