‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி’... ‘தடுப்பூசி போடும் பணியை துவங்கிய நாடு’... ‘இவங்களுக்கு தான் பர்ஸ்ட்’... ‘வாழ்த்து சொல்லி அதிபர் ட்வீட்...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு என்றால் அது அமெரிக்கா தான். அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள Long Island Jewish Medical Center மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சாண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது.

அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சாண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது தொடர்பாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. வாழ்த்துக்கள் அமெரிக்கா! உலகிற்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். பிரிட்டனை தொடர்ந்து, ஃபைசரின் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்