உங்க 'இஷ்டத்துக்கு' பண்ணிட்டு இருக்கீங்க... இது எல்லாம் 'நல்லதுக்கில்ல'... சொந்த 'கட்சியில்' கிளம்பிய 'எதிர்ப்புக்' குரல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா அதிகளவில் அச்சுறுத்திய நிலையில், அமெரிக்காவை கடுமையாக பாதித்தது. லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

கொரோனாவுக்கு எதிராக டிரம்ப் அரசு, சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன், அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீசார் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த பயங்கர கொலையால் அமெரிக்கா முழுவதும் நிறவெறிக்கு எதிரான போராட்டக்களமாக மாறியது.

ராணுவத்தை கொண்டு போராட்டத்தை ஒடுக்குவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் கொந்தளித்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். போராட்டத்தை குறித்து டிரம்ப்பின் கருத்திற்கு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் பலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், டிரம்ப்பை எதிர்த்து புதிய குரல் ஒன்று சொந்த கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பில் இருந்த காலின் பாவெல், தன் ஓய்வுக்குப் பிறகு ட்ரம்ப் இருக்கும் அதே குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகச் செயல்பட்டு வரும் நிலையில், டிரம்ப்பின் செயல்பாட்டிற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். 'நாட்டிலுள்ள அரசியலமைப்பை பின்பற்றாமல் அதிபர் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் நிச்சயம் டிரம்ப்பிற்கு நான் வாக்களிக்க போவதில்லை. அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிப்பேன்' என காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தல், மறுபக்கம் போராட்டக்களமாக மாறியுள்ள அமெரிக்காவில், தொடர்ந்து அதிபர் டிரம்ப் செயல்களுக்கு எதிர்ப்பு கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்