"அடப்பாவி 'மனுஷா'... என்ன வேல பாத்து வெச்சுருக்கே..." 'மனைவி'க்கு தெரியாமல் 'கணவர்' செய்த 'செயல்'... பதிலுக்கு மனைவி செஞ்ச பகீர் 'காரியம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் மாயோமிங் என்னும் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரை மூங்கிலால் ஆன கூடை ஒன்றில் வைத்து ஆற்றில் தூக்கி போட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி, கடும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தனது கணவர், கணவருடைய எஜமானியுடன் தவறான தொடர்பில் இருந்ததை அறிந்து கொண்ட பெண், வேறு சில ஆண்கள் உதவியுடன் கணவர் மற்றும் எஜமானி ஆகியோர் தனியாக இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி, அவரை ஒரு மூங்கில் கூண்டு ஒன்றில் வைத்துக் கட்டியுள்ளார்.

அதன் பிறகு அவரை அருகிலுள்ள ஆற்றில் தூக்கி போட்டுள்ளனர். கூண்டில் வைத்து தூக்கி வீசும் போது அவரால் தப்பிக்க முடியாது என்பதற்காக அப்படி செய்துள்ளனர். தனது கணவரை கூண்டில் வைத்து ஆற்றில் வீசியது என்பது பழங்கால சீனாவில் வழங்கப்பட்டு வரும் தண்டனையாக இருந்துள்ளது.

இதனையடுத்து, மனிதர் ஒருவரை கூண்டில் வைத்து, இருவர் தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அப்பகுதியிலுள்ள போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்த போலீசார், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்