'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக 20 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி உலகை ஏமாற்றியதாக, சீன அரசு மீது அமரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
'கொரோனா வைரஸ் தொற்று குறித்து, முன்னரே எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களையும், செய்தியாளர்களையும் சீனா காணாமல் ஆக்கியது. கொரோனா பரவலைத் தடுக்கவும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மேலும் கொரோனா தொற்று குறித்து உலகுக்கு பொய் சொல்லியது சீனா. இதனால் தான், இந்த வைரசால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. என அமெரிக்கா சார்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும், மிசௌரி மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்புகளுக்கு சீன அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் மிசௌரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொரோனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக, 20 லட்சம் கோடி (20 டிரில்லியன்) அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்' எனக் கோரி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து ஏற்கனவே வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- அம்மாவின் ‘இறுதிசடங்கு’ முடிந்த கையோடு வேலைக்கு திரும்பிய ‘தூய்மை பணியாளர்’.. நெஞ்சை உருக்கிய அவரின் பதில்..!
- அவர் 'இறந்ததையே' 2 நாள் கழிச்சு தான் சொன்னாங்க... ஒருவேளை இப்டி இருக்குமோ?... 'அந்த' நாட்டின் மீது சந்தேகம் எழுப்பும் வல்லுநர்கள்!
- 'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு!
- ஊரடங்கில் ‘செம’ லாபம் பார்த்த ‘நெட்பிளிக்ஸ்’.. 'Money Heist' மட்டுமில்ல ‘இதையும்’ ரொம்ப பேர் பாத்திருக்காங்க..!
- நாயின் ‘மோப்பத்திறன்’ மூலம் கொரோனாவை கண்டறியும் ஆராய்ச்சி.. ‘இதுமட்டும் சாத்தியமானால்..!’.. நம்பிக்கை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்..!
- கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்கள்' குறைவு... குணமடைந்தவர்கள் அதிகம்... 'நம்பிக்கையளிக்கும்' தமிழக மாவட்டம்!
- 'கிம் ஜாங் உன்' பூரண நலம் பெற 'வாழ்த்துகிறேன்...' 'ஆரோக்கியத்துடன்' இருக்கிறார் என 'நம்புகிறேன்...' "வாழ்த்து கூறியவர் யார் தெரியுமா...!"
- 'கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'முதல் கட்டம் வெற்றி அடைஞ்சுட்டோம்...' எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு...!
- 'மனித அறிவு' கொரோனாவை விட 'சக்தி வாய்ந்தது...' 'நம்பிக்கை தரும் ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானிகள் குழு...' 'நாளை' முதல் மனிதர்களிடம் 'தடுப்பூசி சோதனை...'