இப்பல்லாம் 'ஸ்பாட்' பனிஷ்மென்ட் தான்.. 'நோ' வெயிட்டிங்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என ஒரு பழமொழி உள்ளது. ஆனால் தற்காலத்தில் தெய்வம் ரொம்பவும் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது. அது உண்மை என நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மோட்டார் பைக்கில் வரும் திருடன் ஒருவன் சாலையில் ஓரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் ஒருவர் மீது இடித்து அவரை கீழே தள்ளிவிட்டு, மற்றொரு பெண்ணிடம் இருந்து பர்ஸை பறித்துக்கொண்டு வேகமாக செல்கிறான். சில நொடிகளிலேயே எதிர் திசையில் வந்த கார் ஒன்று அந்த திருடனை பைக்குடன் சேர்த்து இடித்து கீழே தள்ளுகிறது.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் கர்மா ஒரு பூமராங் என்றும், அந்த டிரைவர் திருடனின் செயலைப் பார்த்து விட்டுத்தான் அவ்வாறு செய்கிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். நீங்க என்ன நெனைக்கிறீங்க?

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்