பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் இளம்பெண் ஒருவருக்கு அவருடைய பிறந்தநாள் அன்று ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் வாங்கிய பொருட்கள் தான் இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகளுடைய டான்ஸ்.. கீழே இருந்தே மூவ்மெண்ட் கொடுத்த அப்பா.. மொத்த கூட்டமும் இவங்களைத்தான் பார்த்திருக்கு.. கியூட் வீடியோ..!

உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் கனடாவைச் சேர்ந்த ஜூலியட் லாமோர்.

இவர் சமீபத்தில் தன்னுடைய 18 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்க அவருடைய தாத்தா விரும்பியிருக்கிறார். இதனையடுத்து ஜூலியட்டை கடைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் அவர். என்ன வாங்குவது என்று தெரியாமல் கடையை சுற்றி வந்த ஜூலியட் லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்து இருக்கிறார். ஆனால் அந்த லாட்டரி டிக்கெட் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

Images are subject to © copyright to their respective owners.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் லாட்டரி டிக்கெட் குறித்து ஜூலியட் மறந்தே போய்விட்டார். ஜனவரி 7ஆம் தேதி ஜூலியட் லாட்டரி வாங்கிய நிலையில் அதன் பின்னர் தன்னுடைய அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எதேச்சையாக பக்கத்து வீட்டில் வசிப்பவர் தனக்கு லாட்டரி டிக்கெட்டில் பணம் கிடைத்திருப்பதாக கூறுவதைக் கேட்ட ஜூலியட்டுக்கு தான் லாட்டரி டிக்கெட் வாங்கியது ஞாபகம் வந்திருக்கிறது.

அதன்பின்னர் அவர் லாட்டரி நிறுவனத்தின் இணைய பக்கத்திற்கு சென்று பார்த்த போது அவர் திக்கு முக்காடி போயிருக்கிறார். காரணம் ஜூலியட்டிற்கு 48 மில்லியன் கனடா டாலர்கள் பரிசாக கிடைத்திருந்திருக்கிறது. இந்திய மதிப்பில் 290 கோடி ரூபாய் பரிசை வென்ற ஜூலியட் இது குறித்து தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் பேசி இருந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அதன் பிறகு தனது குடும்பத்தினருக்கு ஐந்து பென்ஸ் கார்களை வாங்கி அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து லண்டனில் 40 கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு ஒன்றையும் 100 கோடி ரூபாய்க்கு சிறிய ரக விமானம் ஒன்றையும் வாங்க முடிவு செய்து இருப்பதாக சொல்லி இருக்கிறார் ஜூலியட். மேலும் தன்னுடைய எதிர்காலத்திற்காக மீதி பணத்தை சேமித்து வைக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் கனடா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு

CANADIAN, WOMAN, WINS, LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்