'துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடந்திருக்கு'... 'நிம்மதி பெருமூச்சு விட்ட ராஜ குடும்பம்'... கொண்டாட்டத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், ஏப்ரல் மாதம், தனது 99வது வயதில் மரணம் அடைந்தார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைஸ். இவர் ராணியின் மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் ஆவார். பீட்ரைஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அரச குடும்பத்தினர் வெளியிட்டனர்.

இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்து ராணி இரண்டாம் எலிசபெத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்யின் மரணம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், தான் கொள்ளு பாட்டி ஆகப்போவதை அறிந்த அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

இந்நிலையில் இளவரசி பீட்ரைஸ் அவரது கணவர் எடோர்டோ மாபெல்லி மோஸ்ஸி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2.7 கிலோ எடையில் ஆரோக்கியமாகப் பிறந்துள்ள இந்த குழந்தை, லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் பிறந்துள்ளது.

இளவரசி பீட்ரைஸ்யின் குழந்தை ராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப்பேரக்குழந்தை என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குழந்தையின் பெயர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இளவரசர் பிலிப்பின் மரணத்தால் சோகத்திலிருந்த பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. இளவரசி பீட்ரைஸுக்கு குழந்தை பிறந்துள்ளது இங்கிலாந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்