இளம்பெண்ணுக்கு பிறந்த அச்சு அசல் ட்வின்ஸ்.. 2 குழந்தைக்கும் வேற வேற அப்பா.!. வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது பொதுவான ஒன்று தான். ஒரே தாயின் வயிற்றில் இருந்து, ஒரே நேரத்திலோ அல்லது சில நிமிடங்கள் இடைவெளிகளிலோ இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "புலிக்குட்டி விற்பனைக்கு".. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் பரபரப்பு கைது.!

அப்படி பிறக்கும் குழந்தைகளில், இரண்டு பேருக்கு சிறு சிறு வித்தியாசங்கள் இருக்கும். மாறாக, அப்படியே அச்சடிக்கப்பட்டது போல இரு குழந்தைகளும் ஒன்றாக இருக்கும் போது, இருவரில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பதில் பெற்றோர்கள் கூட ஒரு நிமிடம் திணறி தான் போவார்கள்.

அவ்வப்போது இரட்டைக் குழந்தைகள் தொடர்பான பல வினோத செய்திகள் இணையத்தில் அதிகம் வைரலாகும்.

அந்த வகையில், தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த இரட்டை குழந்தை தொடர்பான செய்தி, மருத்துவர்களையே கடும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரேசில் நாட்டின் கோயாஸ் அருகே உள்ள மினெரியோஸ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அப்படி இருக்கையில் இந்த இரண்டு குழந்தைகளின் தந்தை இரண்டு பேர் என்பது தான் அந்த பெண்ணுக்கு தெரிய வந்து கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. அது மட்டுமில்லாமல், இதனை அறிந்த மருத்துவர்களும் குழம்பிப் போய் உள்ளனர். முன்னதாக அந்த பெண் ஒரே நாளில் இரண்டு நபர்களுடன் உறவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அதில் தந்தை யார் என்பதில் அந்த பெண்ணுக்கும் சந்தேகம் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனால் தன்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒரே ஒரு தந்தை வழி சோதனையை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி அவர் DNA டெஸ்ட் எடுத்து பார்த்ததில் சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் தந்தை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அந்தப் பெண் இதனை அறிந்து திகைத்துப் போகவே, இன்னொரு நபர், மற்றொரு குழந்தையின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் ஆச்சரியப்பட கூடிய விஷயம் என்னவென்றால், இரு ஆண்கள் மூலம் அந்த பெண் கருவுற்றிருந்தாலும் இரண்டு குழந்தைகளின் உருவ ஒற்றுமையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தான் மருத்துவர்களையும் திக்கு முக்காட வைத்துள்ளது.

இது பற்றி பேசும் மருத்துவர்கள், இந்த நிகழ்வு மிகவும் அரிதானதாக இருந்தாலும் முற்றிலும் சாத்தியம் இல்லை என்றும் கிடையாது என தெரிவித்துள்ளனர். அறிவியல் ரீதியாக இந்த முறை Heteroparental Superfecundation என அழைக்கப்படுகிறது. ஒரே தாயிடம் இருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்படும்போது இந்த நிகழ்வு சாத்தியமாகின்றது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மில்லியனில் ஒருவருக்கு தான் இது போன்று நடக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த Heteroparental Superfecundation தன்மை கொண்ட குழந்தைகள், மொத்தம் உலக அளவில் 20 பேர் வரை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு தந்தை என்றும் தகவல் பலரையும் திகைக்க வைத்துள்ளது.

Also Read | "கார் காணாம போனது லண்டன்'ல.. கெடச்சது பாகிஸ்தான்'ல.." உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!.. எப்படி நடந்தது??

BRAZIL WOMAN, BIRTH, IDENTICAL TWINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்