இரட்டை கோபுர தாக்குதலை துல்லியமாக கணித்த பாபா வாங்கா.. இந்தியா பத்தி எழுதி வச்சுட்டுப்போன குறிப்புகள்.. யாருப்பா இவங்க..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எதிர்காலத்தை கணித்த பாபா வாங்கா தனது மறைவிற்கு பிறகும் உலகம் முழுவதும் பலராலும் நினைவுகூரப்படுகிறார்.

Advertising
>
Advertising

Also Read | அடி தூள்.. தமிழக பேருந்துகளில் பார்சல் வசதி.. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. முழு விபரம்..!

எதிர்காலத்தை தெரிந்துகொள்ள நம் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால், உலகில் சிலர் மட்டும் மிகவும் ஆச்சரியகரமாக எதிர்காலத்தில் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். இருப்பினும் அப்படியானவர்கள் விட்டுச்சென்ற குறிப்புகள் பல ஆண்டுகளுக்கு பிறகு துல்லியமாக நடந்திருப்பதையும் நாம் மறுத்துவிட முடியாது. அப்படியானவர்களில் முக்கியமானவர்கள் நாஸ்ட்ராடாமஸ்.

நாஸ்ட்ராடாமஸ்

1503 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பிறந்த நாஸ்ட்ராடாமஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விஷயங்களை அப்போதே கணித்திருந்தார் என சொல்லப்படுகிறது. இரண்டாம் ஹென்றியின் மறைவு, ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் படுகொலை ஆகியவற்றை நாஸ்ட்ராடாமஸ் 1550 களிலேயே கணித்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவருக்கடுத்து மிகவும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா.

பாபா வங்கா, வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல்கேரியாவில் அக்டோபர் 3, 1911 இல் பிறந்தார். இவர் தன்னுடைய 12 ஆம் வயதில் இரு கண் பார்வைகளையும் இழந்தார். மணல் புயலில் சிக்கி இரு கண்பார்வையையும் இழந்ததாகவும் அதனால் எதிர்காலத்தை கணிக்கும் வரத்தை கடவுள் தனக்கு வழங்கியதாகவும் பலமுறை கூறியுள்ளார் பாபா வாங்கா.

கணிப்பு

இவர் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என கணித்ததாக கூறப்படுகிறது. அவரது குறிப்பில்,"எஃகு பறவைகளின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க சகோதரர்கள் வீழ்வார்கள். ஓநாய்கள் புதரில் ஊளையிடும். அப்பாவிகளின் இரத்தம் வழியும்" என இருந்ததாக தெரிகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின்போது இந்த  தகவல்கள் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டது. அதேபோல, அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என வாங்கா கணித்திருந்தார். அதன்படி பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வாங்கா பாட்டிக்கு நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு இறந்துபோன வாங்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகை ஆள்வார் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த நேரத்தில் இந்த விஷயம் உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வந்தது.

இந்தியா

அந்தவகையில், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கும் என்றும், வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் பாபா வங்கா கணித்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவில் விவசாய நிலங்கள் பெருமளவில் அழியும் எனவும் அவர் கணித்ததாக தெரிகிறது. இருப்பினும், ஆசிய நாடுகளில் 2022 ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டு ஆசிய நாடுகளில் அப்படியான பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "நரகத்தின் கிணறை பாதுகாக்கும் ஆவிகள்".. தில்லாக உள்ளே இறங்கிய வீரர்கள் கண்ட காட்சி.. பல வருஷம் கழிச்சு வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

BABA VANGA, BABA VANGA THE NOSTRADAMUS, BALKANS PREDICTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்