ஏலியன்கள் ஏற்கனவே பூமிக்கு வந்துட்டாங்க...! 'ஒரு பொருள் ரொம்ப ஸ்பீடா வந்துச்சு...' 'பாக்குறதுக்கு அது ஒரு...' - வானியல் வல்லுநரின் அதிர வைக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் இருப்பது உண்மை தான் என்பதை விளக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் வல்லுநர் ஏவி லோயப் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

'Oumuamua - "scout" in Hawaiian - in "Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth என்ற அந்த புத்தகத்தில், Oumuamua என்று பெயரிடப்பட்டுள்ள ஏலியன்களின் பொருள் குறித்தும், ஏலியன் பூமிக்கு வந்துள்ளாதா என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வானியலாளர்கள் ஒரு பொருள் மிக விரைவாக நகர்வதைக் கவனித்தனர். அது மற்றொரு நட்சத்திரத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும். விஞ்ஞானிகளின் தொலைநோக்கிகளில் இது எவ்வாறு பிரகாசமாகவும் மங்கலாகவும் ஆனது என்பதைக் கருத்தில் கொண்டு, அது வழக்கத்திற்கு மாறாக ஒளிர்ந்தது. இது ஒரு பிரகாசமான உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதினர்.

இதுப்பற்றி பேசிய லோயப் " மனிதர்கள் தான் தனித்துவமானவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள் என நினைப்பது கர்வத்தின் உச்சம். மனிதர்கள் மட்டும் சிறந்தவர்கள் இல்லை, வேறு பல உயிரினங்களும் உள்ளன. அவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

2017-ம் ஆண்டில் சூரிய குடும்பத்தில் நுழைந்த இந்த Oumuamua பொருளை, சாட்டிலைட் நெருக்கமாக புகைப்படம் எடுக்கவில்லை. அது ஏற்கனவே நமது சூரிய மண்டலத்திலிருந்து வேகமாக வெளியேறும் போது மட்டுமே அதன் இருப்பை எங்களால் அறிய முடிந்தது.

                    

இந்த வித்தியாசமான பொருள் அருகிலுள்ள நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அரிதானது. அதனை விண்வெளியில் வீசும் ஒரு பயணக்கப்பல் போல இருந்தது" என்று தெரிவித்துள்ளார். எனினும் அவரின் ஆய்வுகளை சக விஞ்ஞானிகள் சில ஏற்க மறுக்கிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்