'கலக்கிட்டீங்க' தாலிபான்...! அடுத்தது நம்ம வேட்டை 'இந்தியா' தான், அங்க இருக்குற... - வாழ்த்து மடலில் 'அல்-கொய்தா' குறிப்பிட்டுள்ள 'அதிர' வைக்கும் செய்தி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காஷ்மீர் போன்ற இஸ்லாமிய இடங்களை கைப்பற்ற தாலிபான் முன்வர வேண்டும் என அல்-கொய்தா அழைப்பு விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில் அல்-கொய்தா அவர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. அது வெறும் வாழ்த்து மடலாக மட்டும் இல்லாமல், பல நாடுகளுக்கு எச்சரிக்கை மடலாகவும் இருக்கிறது.

அதில், அடுத்தது நாம் உடனடியாக சோமாலியா, யமன், காஷ்மீர் உள்ளிட்ட இஸ்லாமிய நிலங்களை சொந்தம் கொண்டாடும் நம்முடைய எதிரிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அதோடு, உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு அல்-கொய்தா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், 'இஸ்லாமிய நிலமான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் முதுகெலும்பை உடைத்து காட்டியுள்ளீர்கள். ஆப்கானிஸ்தான் இஸ்லாத்தின் அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் தோல்வி உலகின் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். தாலிபான் தலைமைக்கும், அதன் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுக்கு அல்-கொய்தாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்