'ஜன்னல்' வழியா எட்டி பார்த்தா 'வெளிய' தாலிபான்கள்...! 'ஃப்ரண்ட் ஒருத்தர் வீட்ல பதுங்கி இருக்கோம்...' - ஆப்கானில் சிக்கியுள்ள 'பிரபல' நடிகையின் உறவினர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான நுபூர் அலங்காரின், சகோதரி ஜிக்யாசா அவர்களின் கணவர் கவுசல் அகர்வால் (50) என்பவர் ஆப்கானில் சிக்கியுள்ளார். இவர் கடந்த ஜூலை 16-ம் தேதி வியாபாரம் தொடர்பாக ஆப்கானுக்கு சென்றுள்ளார்.

வியாபார பேச்சு முடிந்து கடந்த 15-ஆம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்ட நிலையில், ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கான் மக்களே கடும் பீதியில் எப்படியாவது நாட்டை விட்டு தப்பிக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில், உலக நாடுகள் பல தங்கள் நாட்டு மக்களை சொந்த ஊருக்கு கொண்டுவரும் முயற்சியில் உள்ளது.

இந்தியாவும் இந்திய மக்களை நாட்டிற்கு கொண்டுவர பல்வேறு வழிகளை செய்து வருகிறது. இந்நிலையில் நடிகையான நுபூர் அலங்காரின் உறவினர் கவுசல் அகர்வால் ஆப்கானில் இருந்து தப்பி இந்தியா திரும்ப முடியாத நிலையில் அவர் கந்தகாரில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறிய கவுசல் அகர்வால், 'நான் இப்போது கந்தகாரில் உள்ள நண்பரின் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன். இங்கு தினமும் 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் விநியோகம் இல்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கிறோம்.

மொபைல் போன் நெட்வொர்க்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை செய்யப்படுகிறது. தாலிபான்கள் கந்தகார் தெருக்களில் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

நான் இங்கு இருப்பதை இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய நிலையிலும், எனக்கு அங்கிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இங்கிருந்து காபூலுக்கு விமானத்தில்தான் செல்ல வேண்டும், ஆனால் எப்படி செல்வது என்பது தான் தெரியவில்லை' என கண்ணீர் மல்க கூறியுள்ளார். .

தன் உறவினர் குறித்து பேசிய நடிகை நுபுர் அலங்கார், 'நாங்கள் அவருடன் தொலைபேசியில் பேசி வருகிறோம். அவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டி இரவும் பகலும் பிரார்த்தனை செய்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்