"பல வருசமா அந்த பங்களா அப்படியே தான் இருக்கு".. மேப் மூலம் தெரிய வந்த 'மர்மம்'!!.. ஊர் மக்கள் சொல்லும் பரபரப்பு காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தில் வெளியாகும் தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் அப்படியே நம்மை ஓரு நிமிடம் கட்டிப் போடும் வகையில் இருக்கும்.

Advertising
>
Advertising

Also Read | பிளாஸ்டிக் பெட்டிக்குள் குவியலாக இருந்த 'தங்க' பற்கள்.. உலகையே அதிர வெச்ச பயங்கரம்!!

அப்படி தான், தற்போது கூகுள் மேப்ஸ் மூலம் தெரிய வந்துள்ள ஒரு விஷயமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hertfordshire பகுதியை அடுத்த Kings Langley என்னும் இடத்தில் பங்களா ஒன்று அமைந்துள்ளது. இந்த வீடு நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீட்டின் பிரதான கேட் அருகே மரங்கள் மற்றும் செடிகள் சூழப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் கூகுள் மேப்ஸ் வழியாக இந்த பகுதியை பார்த்த போது பங்களா வீடு அப்படியே பாழடைந்த படி இருப்பதுடன் மட்டுமில்லாமல், ஏராளமான சொகுசு கார்கள் கூட அங்கே பயனற்று நிற்பது தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வைரலான பிறகு இந்த வீடும் இணையத்தில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இந்த பாழடைந்த பங்களா இப்படி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது பற்றி அந்த கிராமவாசிகள் சில தகவல்களை தெரிவிக்கின்றனர். ரியல் எஸ்டேட் அதிபரான Athanasios என்பவர், இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவியான Sharon என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு மறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் Athanasios இந்த பங்களாவில் வாழ ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், 18 ஆண்டுகள் அங்கே அவர் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் தான் திடீரென யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து காணாமலே போயுள்ளார். இதன் பின்னர், அவர் இந்த பங்களாவிற்கு திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதே வேளையில், அந்த வீட்டிற்குள் ஆடைகள், கார்கள், பர்னிச்சர்கள், பியானோ என அனைத்து பொருட்களும் போட்டது போட்டபடியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடு தற்போது யாருடையது என்பதும் தெரியாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன், இந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

தற்போது, கூகுள் மேப்ஸ் காரணமாக இந்த வீட்டின் புகைப்படங்கள் மற்றும் செய்தி தற்போது மீண்டும் வலம் வர தொடங்கி உள்ளது. இன்று வரை அந்த வீட்டிற்கு யாரும் திரும்பி வராததால், அப்பகுதி முழுவதும் செடிகள் நுழைத்து காணப்படுகிறது.

அதே போல, அந்த வீட்டில் இருந்தவர்கள் ஏன் அனைத்து பொருட்களையும் பாதியிலேயே போட்டு விட்டு சென்றார்கள் என்பதும், இன்னும் ஏன் திரும்ப வரவே இல்லை என்பதும் மர்மமாகவே இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read | "யப்பா, என்ன ஷாட் இது?".. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. வீடியோ'வ பாத்து அரண்டு போன ரசிகர்கள்!!

ABANDONED MANSION, GOOGLE MAPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்