“ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை தங்களது ஊழியர்களில் 99 சதவீதம் பேர் வரை வீட்டிலிருந்து (WFH) வேலை செய்யவும் சமூக இடைவெளியை பராமரிக்கவும் தொடர்ந்து அனுமதிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் தற்போது, ​ சுமார் 6 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் HCL நிறுவனம், டிசம்பர் மாத இறுதிக்குள் அதன் ஊழியர்களில் 20 சதவீதம் பேரை சுழற்சி அடிப்படையில் அலுவலகத்துக்கு அழைத்து வேலை செய்வது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என தெரிகிறது. டெக் மஹிந்திராவில், நான்கில் ஒரு பகுதியினர் ஏற்கனவே தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பி வந்துள்ளதாக,  அதன் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.  அமேசான் கடந்த வாரம் ஜூன் 2021 வரை தனது நிறுவன ஊழியர்களை WFH-க்கு அனுமதித்தது. முன்னதாக, ஆல்பாபெட் இன்க் நிறுவனமான, கூகுள் தனது ஊழியர்கள் ஜூலை 2021 வரை WFH முறைக்கு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், டி.சி.எஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் ஊழியர்கள் WFH-ஐ தொடர விரும்புவதால் ஐரோப்பாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் மட்டுமே, ஊழியர்களை அலுவலகங்களில் வேலை செய்ய அனுமதிக்கத் தொடங்கியுள்ளனர். “ஐரோப்பா கண்டத்தில் சுமார் 10 சதவிகித மக்கள் இதில் வேலையில் உள்ளனர். சீனா மற்றும் ஹாங்காங்கில், எங்களிடம் 90 சதவீத மக்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள், 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் ”என்று இன்போசிஸின் மனிதவளத் தலைவர் ரிச்சர்ட் லோபோ  தெரிவித்தார். வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் புதிய கலவையான வேலையை உள்ளடக்கிய இந்த அமைப்பை, தங்கள் நிறுவனம் நம்புவதாகவும், இன்போசிஸ் இதற்காகத் தயாராக உள்ளதாகவும், ரிச்சர்ட் லோபோ  தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்