"33 வயசுல பாட்டியா??".. சொந்தமா குழந்தை பெத்துக்குறதுக்கு முன்னாடி பெண்ணுக்கு வந்த நிலை.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

33 வயதே ஆகும் பெண் ஒருவர், தற்போது பாட்டியாக மாறியுள்ள சம்பவம் தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"

Missouri மாநிலத்தின் Kansas City என்னும் பகுதியை சேர்ந்தவர் Rachel Garrett Smith. இவருக்கு தற்போது 33 வயதாகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இரண்டு பேரக் குழந்தைகள் மூலம் அவர்களின் பாட்டியாகவும் மாறி உள்ளார் ரேச்சல்.

இதற்கு காரணம் என்ன என்பதை பார்ப்போம். இவர் 48 வயதாகும் ஆடம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆடமிற்கு இது இரண்டாவது திருமணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், முதல் மனைவி மூலம் ஒரு மகளும் ஆடமிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. Sheridan என்ற மகளுக்கு தற்போது 25 வயதாகும் நிலையில், இவருக்கு பிறந்த குழந்தையால் தான் 33 வயதிலேயே பாட்டியாக மாறி உள்ளார் ரேச்சல். வளர்ப்பு மகளான ஷெரிடனின் முதல் குழந்தை கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவது குழந்தையையும் அவர் பெற்றெடுத்துள்ளார்.

Image Credits : Rachel Garrett Smith/SWNS

இளம் வயதிலேயே பாட்டி என்னும் பொறுப்புக்கு ரேச்சல் வந்துள்ள நிலையில், இரு குழந்தைகளையும் அவரே தான் பார்த்துக் கொள்கிறார். மேலும், இரண்டு குழந்தைகளுடன் ரேச்சலை பார்க்கும் பலரும் அவருடைய குழந்தைகள் தான் என்றும் நினைக்கின்றனர். அதே போல, அவர் அந்த குழந்தைகளின் பாட்டி என்றால் சொன்னால் கூட பலரும் நம்புவதில்லை என்றும் தெரிகிறது.

Image Credits : Rachel Garrett Smith/SWNS

இது பற்றி பேசும் ரேச்சல், "இவ்வ்ளவு இளமையாக இருக்கும் போதே பாட்டியாக மாறுவேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இதனை அறிந்து கொண்டதும் அதிகம் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் என்னுடைய வளர்ப்பு மகளான ஷெரிடனுடன் என்னை சேர்த்து பார்க்கும் பலரும் நங்கள் சகோதரிகள் என்றே நினைக்கின்றனர்.

Image Credits : Rachel Garrett Smith/SWNS

நானும் ஆடமும் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம் என தான் முடிவு எடுத்துள்ளோம். அப்படி இருக்கும் போதே இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியாக மாறி உள்ளோம். சொந்த குழந்தைகளுக்கு தாயாராக மாறும் வயதில் தான் இருக்கிறேன்" என ரேச்சல் கூறி உள்ளார். மேலும், இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | 55 வயசுல 5-ஆவது கல்யாணம்.. அப்பா போட்ட பிளான்.. ஸ்பாட்டுக்கே போன பிள்ளைங்க.. அடுத்து நடந்த சம்பவம்.?

WOMAN, GRANDMA, GRANDCHILD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்